January 27, 2010
Johnnie To
January 22, 2010
கவிதையைத் தின்னுதல்
கவிதையைத் தின்னுதல்
-மார்க் ஸ்ட்ராண்ட்
எனது வாய்க்கடையோரங்களிலிருந்து மை வழிகிறது.
எனதைப்போல் வேறேதுமில்லை மகிழ்ச்சி.
கவிதையைத் தின்றுகொண்டிருந்தேன்.
தான் காண்பதை நூலகியால் நம்பமுடியவில்லை.
அவளது கண்கள் சோகமானவை
உடைகளுக்குள் கைகளைப் பொருத்தி நடக்கிறாள்.
கவிதைகள் போயாச்சு.
விளக்கு மங்கலாயிருக்கிறது.
நாய்கள் அடித்தளத்திலிருந்து மேலே வருகின்றன.
உருள்கின்றன அவற்றின் விழிக்கோளங்கள், சருகுபோல்
எரிகின்றன அவற்றின் பொன்னிறக் கால்கள்.
பாவமான நூலகி தன் கால்களை உதைத்துக்கொண்டு அழுகிறாள்.
அவளுக்குப் புரிவதில்லை.
மண்டியிட்டு அவளது கையை நான் நக்குகையில்
அலறுகிறாள்.
நானொரு புது மனிதன்.
அவளைநோக்கி உறுமிக் குரைக்கிறேன்.
துள்ளி விளையாடுகிறேன் களிப்புடன் புத்தகீய இருளில்.
—————————————————————————–
தமிழில்: சன்னாசி
January 12, 2010
Kruder & Dorfmeister
January 7, 2010
Der Baader Meinhof Komplex

புது வருடத் தொடக்கத்தில் ஒரு பரிந்துரை
Powered by WordPress

